ஐஸ்வர்யா ராய் ஒரு பிரபலமான இந்திய திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றார் நடிகை ஐஸ்வர்யா ராய் . இதன் பிறகு தான் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது . அந்த வகையில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் என்ற படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராய் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஜீன்ஸ் ,
கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன் ,எந்திரன், பொன்னியின் செல்வன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை ஐஸ்வர்யா ராய் . இருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது ஹிந்தி திரைப்படங்கள் தான். இப்படி ஹிந்தி சினிமாவில் ,
கொடி கட்டி பறந்து வந்த ஐஸ்வர்யா ராய் கடந்த 2007 ஆம் ஆண்டு மூத்த நடிகரான அமிதாப்பச்சனின் மகனான நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். திருமணமான இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது இருவரும் விவாகரத்து ,
செய்யப் போவதாக தகவல்கள் வெளியானது . இருந்தாலும் இதன் பிறகு இதெல்லாம் வெறும் வதந்தி தான் என்று கூறப்பட்டது . இந் நிலையில் அமிதாப் பச்சன் தன்னுடைய சமூகவலைத்தளப்பக்கத்தில் தன்னுடைய மருமகளான ஐஸ்வர்யாவை அன்பாலோ செய்திருக்கிறாராம்.
அது மட்டுமல்லாமல் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் ” எல்லாம் சொன்னது ,எல்லாம் முடிந்தது ,அதனால் செய்யாததை செய்” என்று பதிவிட்டு இருக்கிறார் . இதை பார்த்த ரசிகர்கள் அப்ப விவாகரத்து உண்மை தானா என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகின்றனர்…
T 4854 – everything said everything done .. so do the done and done the do .. pic.twitter.com/wYrAMetoGo
— Amitabh Bachchan (@SrBachchan) December 8, 2023