May 1, 2024

20 வருஷத்துக்கு முன்பே ..!! அஜித்தை அரசியலுக்கு வர சொல்லிய ஜெயலலிதா ..!! ஒரே வார்த்தையில் முடித்துக்கொண்ட அஜித் ..!!

புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு பிறகு சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு அதிக அளவில் ஆர்வம் காட்டி வந்தனர். ஆனால் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு பிறகு கேப்டன் விஜயகாந்தால்  மட்டும்தான் அரசியலில் ஜொலிக்க முடிந்தது.  அதன் பிறகு யாராலும் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை.  இதை அடுத்து தற்போது நடிகர் விஜய் ” தமிழக வெற்றி கழகம் ” என்ற கட்சியை தொடங்கியுள்ளார் .

இவர் முதலமைச்சர் ஆவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் . மேலும் முக்கிய நடிகர்கள் பலரும் அரசியலில் ஆர்வம் காட்டி வந்த நிலையில்,  அஜித் மட்டும் அரசியல் என்றால் தூரமாகவே இருந்து வருகிறார் . குறிப்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சரான,

செல்வி ஜெயலலிதா கூட அஜித்தை அரசியலுக்கு வர சொல்லி அழைத்திருக்கிறார்.  அந்த வகையில் ஜெயலலிதாவுக்கு அஜித் என்றால் ரொம்ப பிடிக்குமாம்.  காரணம் அவர் தனக்கு ஒரு மகன் இருந்தால் அஜித்தை போலத்தான் இருப்பார் என்ற பாசத்தில் அவர் மீது,

ஒரு தனிப்பிரியத்தில் இருந்திருக்கிறார்.  இன்னும் சொல்லப்போனால் அஜித்தின் கல்யாணத்தில் ரொம்ப நேரம் இருந்தாராம் ஜெயலலிதா.  இதனால் அஜித்தை எப்படியாவது தன்னுடைய கட்சியில் இணைத்து விட வேண்டும் என்று முயற்சி செய்து இருக்கிறார் ஜெயலலிதா.

ஆனால் அஜித் எனக்கு அரசியல் வேண்டாம் , நான் நடிகராகவே இருந்து கொள்கிறேன் என்று மறுத்துவிட்டாராம் . அன்று மட்டும் அஜித் அரசியலில் நுழைந்திருந்தால் இந்நேரம் மிகப்பெரிய உயரத்தில் இருந்திருப்பார் என்பதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *