தமிழ் சினிமா உலகில் கடந்த 2012 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பில்லா 2. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானவர் தான் நடிகர் வித்யூத் ஜாம்வால் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது அதே ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி படத்தின் மூலம் தான் . இந்த படத்தில் வில்லனாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும்,
கவர்ந்திருந்தார் நடிகர் வித்யூத் ஜாம்வால். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் வித்யூத் ஜாம்வால் . மேலும் இவர் அதிகம் ஹிந்தி படங்களில் நடித்த தான் பெரிய அளவில்,
பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி இருக்கும் நிலையில் நேற்று தன்னுடைய 43 வது இனிய பிறந்தநாள் வித்தியாசமாக கொண்டாடியிருக்கிறார் நடிகர் வித்யூத் ஜாம்வால். அந்த வகையில் நடுக்காட்டில் ஆடையில்லாமல் தன்னுடைய பிறந்தநாளை,
கொண்டாடியிருக்கிறார் நடிகர் வித்யூத் ஜாம்வால். அதற்கு காரணம் என்னவென்றால் வருடத்தில் ஏழு முதல் 10 நாட்கள் வரை நகர வாழ்க்கையை விட்டுவிட்டு இதுபோன்று காட்டில் தனியாக தங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறாராம் நடிகர் வித்யூத் ஜாம்வால்.
இயற்கையோடு இருக்கும் போது தான் யார் என்பதை அறிந்து கொள்ள முடியும் என்று புகைப்படத்தை வெளியிட்டு கூறியிருந்தார் நடிகர் வித்யூத் ஜாம்வால் . இந்நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகின்றனர் …
View this post on Instagram