April 28, 2024

என்னை பார்ப்பதற்கு அவர் மீண்டும் வந்தார் ..!! நெகிழ்ச்சியில் கூறிய மாரிமுத்துவின் மனைவி ..!! எல்லாம் அவர் செய்த பாக்கியம் ..!!

மறைந்த நடிகர் மாரிமுத்து ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார் . ஆரம்பத்தில் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றி வந்த மாரிமுத்து பின்னர் உதவி இயக்குனராக சேர்ந்தார் . இதன்பிறகு கண்ணும் கண்ணும் என்ற படத்தில் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்த மாரிமுத்து இந்த படத்தை தொடர்ந்து புலிவால் என்ற படத்தையும் இருந்தார் .

ஆனால் இந்த இரண்டு படங்களுமே ஓரளவிற்கு தான் வரவேற்பை பெற்றது . இதனால் இயக்குவதை நிறுத்திவிட்டு முழு நேர நடிகராகவே மாறிவிட்டார் நடிகர் மாரிமுத்து . அந்த வகையில் தமிழில் எக்கச்சக்கமான படங்களில் நடித்தும் கிடைக்காத வரவேற்பு இவருக்கு ,

ஒரே சீரியலில் கிடைத்தது தான் ஆச்சிரியமான ஒன்று . அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் நடிகர் மாரிமுத்து.  இந்நிலையில் சமீபத்தில் மாரடைப்பால் இறந்து விட்டார் நடிகர் மாரிமுத்து .

அவருடைய மறைவுக்குப் பிறகு பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மாரிமுத்துவின் மனைவி கூறியதாவது,  அவருடைய இறப்பு செய்தி கேட்டு எங்கள் வீட்டுக்கு வாய் பேச முடியாத ஒரு நபர் வந்திருந்தார்.  வந்தவருக்கு உணவு வழங்கி விட்டு பின்னர் அவருடைய ஊருக்கு ,

அனுப்பி வைத்து விட்டோம் . இதைப் பார்த்ததும் இவருக்கு இப்படி ஒரு ரசிகரா என்று எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.  இன்னும் சொல்லப்போனால் என்னுடைய கணவரே  என்னை மீண்டும் பார்க்க வந்தது போல இருந்தது என்று கூறியிருந்தார் மாரிமுத்துவின் மனைவி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *