April 30, 2024

அண்ணன் மகளின் இறப்பில் தலைகாட்டாத கங்கை அமரன் ..!! தம்பியையும் பகைத்துக்கொண்ட இளையராஜா ..!! வெளிவந்த உண்மை ..!!

கடந்த வாரம் இசைஞானி இளையராஜாவின் மகளான பவதாரணி உடல் நலக்குறைவால் இறந்து விட்டார்.  இவருடைய திடீர் மரணம் ரசிகர்களையும்,  பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது .  ஆனால் இளையராஜாவின் கூட பிறந்த தம்பியான கங்கை அமரன் எட்டி கூட பார்க்க வில்லையாம்.  அதற்குக் காரணம் இளையராஜாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு தானாம். அந்த வகையில் இளையராஜா நினைத்து இருந்தால்,

தம்பி கங்கை அமரனை பெரிய அளவில் வளர்த்து விட்டிருக்கலாம் . ஆனால் அவர் அதை செய்யவே இல்லையாம்.  அது மட்டுமல்லாமல் இளையராஜாவின் குணம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  ஏற்கனவே பாலச்சந்தர், எஸ் பி பி, வைரமுத்து , மணிரத்னம் போன்ற,

பல பிரபலங்களுடன் சண்டை போட்டு பிரிந்தார் . அதேபோல ஒரு நாள் கங்கை அமரன் உடன் ஏற்பட்ட பிரச்சனையால் வெளியே போடா நாயே என்று கூறிவிட்டாராம் . இத்தனை நாட்களாக அண்ணனுக்கு ஒரு தூணாக இருந்தும் இப்படி சொல்லிவிட்டாரே என்று மனக்கவலையில்,

இருந்திருக்கிறார் கங்கை அமரன் . இன்னும் சொல்லப்போனால் இந்த பிரச்சனையால் கங்கை அமரனின் மனைவி இறப்பிற்கு கூட இளையராஜா வரவில்லையாம். இதன் பிறகு இருவரும் பேசி சமாதானமானதாக கூறப்படுகிறது . இருந்தாலும் கங்கை அமரனுக்கு இளையராஜா மீது இருக்கும்,

கோபம் குறையவில்லையாம் . இதனால் பவதாரணியின் இறப்பில் கலந்து கொண்டால் அண்ணனின் முகத்தை பார்க்க நேரிடும் என்றுதான் அவர் வரவில்லையாம். இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *