கடந்த வாரம் இசைஞானி இளையராஜாவின் மகளான பவதாரணி உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இவருடைய திடீர் மரணம் ரசிகர்களையும், பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது . ஆனால் இளையராஜாவின் கூட பிறந்த தம்பியான கங்கை அமரன் எட்டி கூட பார்க்க வில்லையாம். அதற்குக் காரணம் இளையராஜாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு தானாம். அந்த வகையில் இளையராஜா நினைத்து இருந்தால்,
தம்பி கங்கை அமரனை பெரிய அளவில் வளர்த்து விட்டிருக்கலாம் . ஆனால் அவர் அதை செய்யவே இல்லையாம். அது மட்டுமல்லாமல் இளையராஜாவின் குணம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஏற்கனவே பாலச்சந்தர், எஸ் பி பி, வைரமுத்து , மணிரத்னம் போன்ற,
பல பிரபலங்களுடன் சண்டை போட்டு பிரிந்தார் . அதேபோல ஒரு நாள் கங்கை அமரன் உடன் ஏற்பட்ட பிரச்சனையால் வெளியே போடா நாயே என்று கூறிவிட்டாராம் . இத்தனை நாட்களாக அண்ணனுக்கு ஒரு தூணாக இருந்தும் இப்படி சொல்லிவிட்டாரே என்று மனக்கவலையில்,
இருந்திருக்கிறார் கங்கை அமரன் . இன்னும் சொல்லப்போனால் இந்த பிரச்சனையால் கங்கை அமரனின் மனைவி இறப்பிற்கு கூட இளையராஜா வரவில்லையாம். இதன் பிறகு இருவரும் பேசி சமாதானமானதாக கூறப்படுகிறது . இருந்தாலும் கங்கை அமரனுக்கு இளையராஜா மீது இருக்கும்,
கோபம் குறையவில்லையாம் . இதனால் பவதாரணியின் இறப்பில் கலந்து கொண்டால் அண்ணனின் முகத்தை பார்க்க நேரிடும் என்றுதான் அவர் வரவில்லையாம். இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…