April 22, 2024

விளம்பரம் தேடும் நடிகர்களுக்கு மத்தியில் இப்படியொரு நடிகரா ..?? சென்னை மக்களுக்காக அஜித் கொடுத்த பெரிய தொகை ..!! இவரைப்போய் தப்பா நினைச்சுட்டோமே..??

தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல டாப் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அஜித்குமார் . தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்களிலேயே பெரிய அளவில் விளம்பரம் தேடாதவர் நடிகர் அஜித்குமார் . இதனாலேயே சமூக வலைத்தளப்பக்கமே தலை காட்டாமல் தானுண்டு தன்னுடைய வேலை உண்டு என்று இருந்து வருகிறார் நடிகர் அஜித் . இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ,

மிக்ஜாம்  என்ற புயல் சென்னையையே புரட்டி  போட்டது . இதனால் சென்னை மக்கள் அத்தியாவசிய தேவைக்காகவே பெரிய அளவில் கஷ்டப்பட்டு வருகின்றனர் . இந்த நேரத்தில் ஒரு சில நடிகர்கள் சென்னை மக்களுக்காக நிதி உதவி வழங்கியிருந்தனர் .

இப்படி இருந்த நிலையில் வெள்ளத்தால் விஷ்ணு விஷாலின் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது . பின்னர் இவரையும் நடிகர் அமீர் கானையும் பத்திரமாக மீட்பு குழுவினர் மீட்டனர் . இதன் பிறகு அவர்களுக்கு தேவையான உதவிகளை நடிகர் அஜித்குமார் செய்திருந்தார்.

இந்த நேரத்தில் ஏழைகள் உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.  ஆனால் நடிகர் அஜித் விளம்பரமே தேடாமல் சென்னை மக்களுக்கு உதவி செய்திருக்கிறாராம் . அந்த வகையில் இதற்கு முன்பு வந்த கஜா புயலின் போது சத்தமே இல்லாமல்,

15 லட்சம் ரூபாய் கொடுத்து இருந்தாராம். இதனால் கண்டிப்பாக இப்போதும் ஒரு பெரிய தொகையை அஜித் கொடுத்திருப்பார் என்றும், அது குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.  இதைப் பார்த்த ரசிகர்கள் இவரை போய் தப்பா நினைச்சுட்டோமே என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *