April 29, 2024

சத்தமே இல்லாமல் கல்யாணத்தை முடித்த நடிகர் அசோக் செல்வனின் திருமண புகைப்படங்கள் ..!!

அசோக் செல்வன் ஒரு தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட இளம் நடிகர்களில் ஒருவர் ஆவார்.  கடந்த 2013 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர் அசோக் செல்வன் . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து தெகிடி ,சவாலே சமாளி, கூட்டத்தில் ஒருத்தன்,ஓ மை  கடவுளே, மன்மதலீலை, நித்தம் ஒரு வானம் , போர் தொழில் போன்ற ,

பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் அசோக் செல்வன். இப்படி  தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வந்ததால் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வந்தது . இப்படி இருக்கும் நிலையில் நடிகர் அருண் பாண்டியனின் மகளான ,

நடிகை  கீர்த்தி பாண்டியனை இன்று திருமணம் செய்து கொண்டார் நடிகர் அசோக் செல்வன்.  இருவரும் ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர் . அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன்,

இன்று திருநெல்வேலியில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் . தற்போது அவர்களுடைய திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *