தற்போது தமிழ் சினிமாவில் சத்தமே இல்லாமல் முன்னணி நடிகர் ஆவதற்கு தீயாக வேலை செய்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன் . அப்படி எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் இன்று ஒரு தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக கலக்கி கொண்டு வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். அப்படி சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.
இதைத்தொடர்ந்து ரங்கூன் படத்தின் இயக்குனரான இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன் . உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு,
ஜோடியாக நடிகை சாய்பல்லவி நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் அண்மைக்காலமாக நடிகர் சிவகார்த்திகேயன் எங்கு சென்றாலும் ஒரு குல்லாவுடன் தான் சென்று வந்தார். குறிப்பாக அடுத்த படத்திற்கான கெட்டப் தலையில் உள்ளதால் தான் இப்படி குல்லாவை,
வைத்து மறைத்திருக்கிறேன் என்று சிவகார்த்திகேயனே நிறைய இடத்தில் சொல்லி இருந்தார். இப்படியொரு நிலையில் அந்த குல்லாக்குள் இருந்த ரகசியம் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் 75 நாட்கள் வெற்றிகரமாக ,
முடிந்து விட்டதாம் . அந்தப் புகைப்படத்தை தற்போது படக்குழுவினர் அறிவித்துள்ளனர் . அதில் சிவகார்த்திகேயன் ஷா ட் கட்டிங் பண்ணியிருக்கிறார் . இதைப் பார்த்த ரசிகர்கள் இதற்குத்தான் இத்தனை நாளா தலையை மறைத்து வைத்திருந்தாரா என்று கூறி வருகின்றனர்…