தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு ஒரு தனி பெயர் உண்டு என்று தான் சொல்ல வேண்டும் . அந்த அளவிற்கு தன்னுடைய தங்கமான குணத்தால் ரசிகர்களின் மனதில் குடியிருந்து வருகிறார் நடிகர் விஜயகாந்த். மேலும் நடிகராக கலக்கி கொண்டு வந்த விஜயகாந்த் அரசியலிலும் ஒரு கை பார்த்தார் . ஆனால் சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார் .
இப்படி இருந்த நிலையில் கடந்த மாதம் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த் . மேலும் அவருடைய உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது . இதனால் அவர் பூரண குணமடைய வேண்டும் என்று ,
ரசிகர்கள் தினம் தினம் பிரார்த்தனை செய்து வருகின்றனர் . இப்படி இருக்கும் ந்த நிலையில் கேப்டனை பற்றிய பொய்யான வதந்திகள் இணையத்தில் பரவி வந்தது . இதனால் கடுப்பான விஜயகாந்தின் மனைவியான பிரேமலதா இதுபோன்று செய்யாதீர்கள் என்று ,
கோரிக்கை வைத்திருந்தார் . இந்நிலையில் ரசிகர்களின் பிரார்த்தனை வீண் போகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் பல நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த் தற்போது குணமடைந்து விட்டாராம் . இன்னும் சில நாட்களில் வீடு திரும்ப உள்ளாராம் .
அதோடு விரைவில் தன்னுடைய ரசிகர்களையும் விஜயகாந்த் சந்திக்க உள்ளதாக கூறியிருந்தார் விஜயகாந்தின் மனைவியான பிரேமலதா…