வனிதா விஜயகுமார் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . மூத்த நடிகரான விஜயகுமாரின் மகளான வனிதா சந்திரலேகா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான். இந்த நிகழ்ச்சி இவரை,
பெரிய அளவில் பிரபலமாக்கியது என்று தான் சொல்ல வேண்டும் . இப்படி இருக்கும் நிலையில் வனிதாவை தொடர்ந்து அவருடைய மகளான ஜோவிகாவும் தற்போது பிக் பாஸ் சீசன் செவனின் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். மேலும் ஆரம்பத்தில் இருந்தே ,
தன்னுடைய மகளுக்கு மட்டுமே சப்போர்ட் செய்து வந்தார் வனிதா . இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் பிரதீப்பின் ஆதரவாளர் ஒருவர் வனிதாவை சரமாரியாக தாக்கி இருந்தார் . ஆனால் இது குறித்து வனிதா காவல் நிலையத்தில் எந்த ஒரு புகார் கொடுக்கவில்லை.
இதிலேயே தெரிகிறது இவர் நன்றாக நாடகம் ஆடுகிறார் என்று பலரும் கூறிவந்தனர் . இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வனிதா கூறியதாவது , நான் ஒரு திறந்த புத்தகம் ,இந்த உலகத்தில் இருந்து எதையும் மறைக்க மாட்டேன் . நான் மிகவும் நேர்மையான நபர் .
Im an open book I dont hide anything from the world… Iam the most honest person alive … and u know what ill keep being honest and god is watching 🙏
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) November 30, 2023
மேலும் கடவுள் என்னைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார் என்பதை நீங்களும் அறிவீர்கள் என்று கூறியிருந்தார் . இதைப் பார்த்த ரசிகர்கள் நீங்கள் நேர்மையானவரா என்று கழுவி ஊற்றி வருகின்றனர்…