கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக்ஜாம் புயல் வந்து சென்னையையே ஒரு உலுக்கு உலுக்கியது என்று தான் சொல்ல வேண்டும். இதனால் அன்றாட தேவைக்காகவே சென்னை மக்கள் போராடி வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் விரைவில் அரசியலுக்கு வர இருக்கும் நடிகர் விஜய், சென்னை மக்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு தன்னுடைய ரசிகர்களுக்கு கட்டளையிட்டு இருந்தார்.
மேலும் விஜய்யின் பேச்சை தட்டாத ரசிகர்கள் அவர் சொல்லிய படியே தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இந்த மாதிரி நேரத்தில் ரசிகர்கள் களத்தில் இறங்கியது பாராட்ட வேண்டிய விஷயம் தான் . அப்படித்தான் பாலவாக்கம் பகுதியில் ,
விஜய் ரசிகர்கள் உதவி செய்தது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறிவிட்டது . காரணம் 200 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டபோது கூடவே ஒருவர் விஜய் புகைப்படத்தை வைத்துக்கொண்டு நின்று இருக்கிறார். இதுதான் தற்போது ,
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . மேலும் எல்லோருமே சட்டையில் நடிகர் விஜய்யின் பேஜை குத்தி இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது இப்படி ஒரு விளம்பரம் தேவையா என்று பலரும் விமர்சித்து வருகின்றனர் . இதைப் பார்த்த பலரும் உங்களுக்கு உதவியை விட,
விளம்பரம் தான் ரொம்ப முக்கியமா .?என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகின்றனர் . இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க…
*சற்றுமுன்*
தளபதி அவர்களின் உத்தரவுப்படி
அகில இந்திய பொதுச் செயலாளர் அண்ணன் புஸ்ஸி N.ஆனந்த்ExMLA அவர்கள் வழிகாட்டுதல்படி
*மிக்ஜாம் புயலால்* பாதிக்கப்பட்ட
பாலவாக்கம் விஷ்ராந்தி ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும்
முதியோர்களுக்கு
*மதிய உணவு 200 பேருக்கு வழங்கப்பட்டது* pic.twitter.com/rlxnPluiZq— ECR.P.Saravanan (@EcrPSaravanann) December 7, 2023