உதயநிதி ஸ்டாலின் தற்போது அரசியலில் பிசியாக இருந்து வருகிறார் . இருந்தாலும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்ற தன்னுடைய நிறுவனத்தின் மூலம் பல தமிழ் திரைப்படங்களை விநியோகம் செய்து வருகிறார். குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்களை உதயநிதி தான் விநியோகம் செய்து வருகிறார். மேலும் ஒரு படத்திற்கு அதிகாலை காட்சி கொடுக்கலாமா.? வேண்டாமா .? என்பதும் ,
இவர்களுடைய கையில் தான் இருக்கிறது . அப்படி கடந்த வருடம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லியோ . இந்த படத்தின் அதிகாலை காட்சிக்காக இந்த படத்தின் தயாரிப்பாளர் பெரிய அளவில் போராடினார் .
ஆனால் முடியவே முடியாது என்று மறுத்து விட்டனர் . ஆனால் உதயநிதி ஸ்டாலின் நினைத்திருந்தால் கொடுத்திருக்கலாம். மேலும் விஜய் அரசியலுக்கு வருவதால் தான் உதயநிதி கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது . இப்படி இருக்கும் நிலையில் அன்று விஜய்க்கு ,
அதிகாலை காட்சி கொடுக்காத உதயநிதி தற்போது சிவகார்த்திகேயனின் படத்திற்கு கொடுத்திருப்பது தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் வருகின்ற பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தான் அயலான்.
இந்த படத்திற்கு அதிகாலை காட்சி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது . இதைப் பார்த்த ரசிகர்கள் விஜய்க்கு ஒரு நியாயம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு நியாயமா , உதயநிதி ஸ்டாலின் ஓரவஞ்சனை காட்டுகிறார் என்று வறுத்தெடுத்து வருகின்றனர்…