April 30, 2024

சென்னையே வெள்ளத்தில் தவிச்சுக்கிட்டு இருக்கு..!! உங்களுக்கு இது தான் முக்கியமா ..?? மனசாட்சியே இல்லாமல் ஏ ஆர் ரகுமான் போட்ட பதிவு ..!!

தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கிய இசையமைப்பாளராக இருந்து வருபவர் ஏ ஆர் ரகுமான் . ரோஜா என்ற படத்தின்  மூலம் தன்னுடைய இசை பயணத்தை தொடங்கிய ஏ ஆர் ரகுமான் இன்று வரை ஒரு தவிர்க்க முடியாத இசையமைப்பாளராகவே இருந்து வருகிறார் . குறிப்பாக எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் இருந்து வந்த ஏ ஆர் ரகுமான் சமீப காலமாக ஒரு சில சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு வருகிறார் .

அந்த வகையில் அண்மையில் “மறக்குமா நெஞ்சம்” என்ற இசை கச்சேரியை நடத்தி இருந்தார் ஏ ஆர் ரகுமான் . அதில் ஏற்பட்ட சில குளறுபடியால் ரசிகர்கள் பலருக்கு டிக்கெட் கிடைக்காமல் போனது மட்டுமல்லாமல் ஒரு சிலர் பாலியல் சீண்டலுக்கும் ஆளாகியுள்ளனர் .

இதனால் ஏ ஆர் ரகுமானுக்கு எதிராக பலரும் கொந்தளித்தனர் . இப்படி இந்த பிரச்சனை ஓய்ந்த நிலையில் அடுத்த பிரச்சனையில் சிக்கியிருக்கிறார் ஏ ஆர் ரகுமான் . அந்த வகையில் மிக்ஜாம்  புயலால் சென்னையே ஆடிப் போய் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த புயலால் சென்னை மக்கள் அன்றாட வாழ்க்கை இழந்து தவிர்த்து வருகின்றனர்.  இன்னும் சில பேர் உணவு கூட இல்லாமல் ஏங்கி கொண்டு இருக்கின்றனர் . இப்படி இருக்கும் நேரத்தில் ஏ ஆர் ரகுமான் தன்னுடைய புது படத்தின் பிரமோஷனுக்காக ட்விட் பதிவு ஒன்றை போட்டு இருந்தார்.

இதுதான் தற்போது அவருக்கு எதிராக திரும்பி உள்ளது . மேலும் இதை பார்த்த ரசிகர்கள் சென்னையே வெள்ளத்தில் தவிச்சுக்கிட்டு இருக்கு, உங்களுக்கு படத்தின் ப்ரோமோஷன் தான் முக்கியமா என்று திட்டித்தீர்த்து வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *