தமிழ் சினிமா உலகில் திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம் அதற்கு நிறம் ஒரு தடை கிடையாது என்று நிரூபித்து காட்டியவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் . என்னதான் ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் நிறத்தை காரணம் காட்டி ஒதுக்கப்பட்டாலும் , அதையெல்லாம் தாண்டி மேலே வந்து ஜெயித்துக் காட்டினார்கள். அது மட்டுமல்லாமல்,
தமிழ் சினிமா உலகில் இருவரும் நல்ல நண்பர்களாகவும் இருந்து வந்தனர் . அப்படித்தான் ஒருமுறை சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு விஜயகாந்துக்கு வந்திருக்கிறது. அந்த திரைப்படம் தான் கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான முரட்டுக்காளை. இந்த படத்தில் முதலில்,
வில்லனாக நடிக்க இருந்தது விஜயகாந்த் தானாம் . ஆனால் விஜயகாந்தின் நண்பரான ராவுத்தர் நீ வில்லனாக நடித்தால் உன்னுடைய மார்க்கெட் சரிந்து விடும் என்று கூறியிருக்கிறார் . அதன் பிறகு தான் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்து விட்டாராம் விஜயகாந்த்…