கௌதமி ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார். தெலுங்கு படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய கௌதமி கடந்த 1988 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான குரு சிஷ்யன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து எங்க ஊரு காவல்காரன், நம்ம ஊரு நாயகன் ,அபூர்வ சகோதரர்கள் ,ராஜா சின்ன ரோஜா,
பணக்காரன் ,நம்ம ஊரு பூவாத்தா, தர்மதுரை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை கௌதமி . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும்,
நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இதனிடையே சந்திப் என்பவரை திருமணம் செய்து கொண்ட கௌதமிக்கு சுப்புலட்சுமி என்ற மகள் இருக்கிறார் . மகள் பிறந்த பிறகு கணவரை விவாகரத்து செய்த கௌதமி சில வருடங்கள் கமல்ஹாசனுடன் ஒன்றாக இருந்தார் .
பின்னர் அவரையும் பிரிந்த கௌதமி தற்போது தன்னுடைய மகளுடன் இருந்து வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய மகளுடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் நடிகை கௌதமி. இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…