தவளை தன் வாயால் கெடும் என்பதற்கு உதாரணமாக மாறி இருக்கிறார் நடிகர் மன்சூர் அலிகான் . அப்படி எப்போதும் விளையாட்டாக பேசி வரும் மன்சூர் அலிகான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை திரிஷாவை பற்றி மிகவும் கொச்சையாக பேசி இருந்தார் . இது தற்போது பூகம்பம் போல வெடித்துள்ளது . இதனால் நாளுக்கு நாள் நடிகை திரிஷாவுக்கு தான் அதிக ஆதரவு இருந்து வருகிறது.
இதனால் மன்சூர் அலிகான் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் . ஆனால் மன்சூர் அலிகான் நான் தப்பே செய்யவில்லை, என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்று வெளிப்படையாக கூறிவிட்டார் . அப்படி இருந்தும் கூட ,
இந்த சர்ச்சை இன்னும் ஓய்ந்த பாடு இல்லை. இப்படி இருக்கும் நிலையில் இதுகுறித்து சீமான் கூறியதாவது , மன்சூர் அலிகான் ஓர் இன உணர்வு மிக்க ஒரு தமிழன் . இவரைப் பற்றி வரும் செய்தியை பார்க்கும் போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஆனால் இந்த விஷயத்தில் ,
என்னால் எந்த ஒரு கருத்தையும் சொல்ல முடியாது . எனக்கு தெரிந்தவரை அவர் யாருடைய மனதையும் காயப்படுத்தக்கூடியவர் கிடையாது. அவர் வேடிக்கையாக பேசக்கூடியவர் . அப்படித்தான் பேசி இருப்பார் . மேலும் இப்போது திரிஷாவிற்கு ஆதரவு கொடுக்கும் ,
மகளிர் ஆணையம் மணிப்பூரில் இரண்டு பெண்களை வன்கொடுமை செய்தபோது எங்கே போனார்கள் என்று சராமாரியாக கேள்வி எழுப்பி இருந்தார் சீமான்…