May 2, 2024

மன்சூர் அலிகான் அவ்வளவு மோசமானவர் கிடையாது ..!! ஆதரவு குரல் கொடுத்த சீமான் ..!! மணிப்பூர் வன்கொடுமை உங்க கண்ணுக்கு தெரியலையா ..??

தவளை தன் வாயால் கெடும் என்பதற்கு உதாரணமாக மாறி இருக்கிறார் நடிகர் மன்சூர் அலிகான் . அப்படி எப்போதும் விளையாட்டாக பேசி வரும் மன்சூர் அலிகான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை திரிஷாவை பற்றி மிகவும் கொச்சையாக பேசி இருந்தார் . இது தற்போது பூகம்பம் போல வெடித்துள்ளது . இதனால் நாளுக்கு நாள் நடிகை திரிஷாவுக்கு தான் அதிக ஆதரவு இருந்து வருகிறது.

இதனால் மன்சூர் அலிகான் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் . ஆனால் மன்சூர் அலிகான் நான் தப்பே செய்யவில்லை,  என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்று வெளிப்படையாக கூறிவிட்டார் . அப்படி இருந்தும் கூட ,

இந்த சர்ச்சை இன்னும் ஓய்ந்த பாடு இல்லை.  இப்படி இருக்கும் நிலையில் இதுகுறித்து சீமான் கூறியதாவது , மன்சூர் அலிகான் ஓர் இன  உணர்வு மிக்க ஒரு தமிழன் . இவரைப் பற்றி வரும் செய்தியை பார்க்கும் போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.  ஆனால் இந்த விஷயத்தில் ,

என்னால் எந்த ஒரு கருத்தையும் சொல்ல முடியாது . எனக்கு தெரிந்தவரை அவர் யாருடைய மனதையும் காயப்படுத்தக்கூடியவர் கிடையாது.  அவர் வேடிக்கையாக பேசக்கூடியவர் . அப்படித்தான் பேசி இருப்பார் . மேலும் இப்போது திரிஷாவிற்கு ஆதரவு கொடுக்கும் ,

மகளிர் ஆணையம் மணிப்பூரில் இரண்டு பெண்களை வன்கொடுமை செய்தபோது எங்கே போனார்கள் என்று சராமாரியாக கேள்வி எழுப்பி இருந்தார் சீமான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *