April 21, 2024

இறங்கிவந்து மன்னிப்பு கேட்ட மன்சூர் ..!! கமல் பட வசனத்தை பதிவிட்ட திரிஷா ..!! என்னவென்று நீங்களே பாருங்க ..!!

தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல டாப் நடிகையாக இருந்து வருபவர் நடிகை திரிஷா . இடையில் மார்க்கெட் இல்லாமல் இருந்து வந்த திரிஷாவுக்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரியளவில் கைக்கொடுத்தது .  இதன் பிறகு இவருக்கு பல படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது . அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் நடித்திருந்தார் நடிகை திரிஷா .

இந்த படத்தில் நடிகர் மன்சூர் அலிகானும்  நடித்திருந்தார் . இந்நிலையில் சமீபத்திய  பேட்டி ஒன்றில் திரிஷாவை பற்றி மிகவும் கொச்சையாக பேசி சர்ச்சையில் சிக்கினார் நடிகர் மன்சூர் அலிகான்.  இதனால் திரிஷாவுக்கு பல பிரபலங்கள் ஆதரவு குரல் கொடுத்தனர் .

அது மட்டுமல்லாமல் மன்சூர் அலிகான் மீது வழக்குகள் பாய்ந்தது.  இப்படி இருந்த நிலையில் இன்று திரிஷாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருந்தார் நடிகர் மன்சூர் அலிகான் . கிட்டத்தட்ட ஒரு பக்கம் அளவிற்கு மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டு இருந்தார் மன்சூர் அலிகான்.

இந்நிலையில்  இதை பார்த்த திரிஷா கமல் பட வசனத்தை கூறியுள்ளார் . அந்த வகையில் “தவறு செய்வது மனிதம் ,மன்னிப்பது தெய்வீகம்” என்று விருமாண்டி பட டயலாக் போல பதிவிட்டு இருந்தார் நடிகை திரிஷா. தற்போது அவர் வெளியிட்ட பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .

இதைப் பார்த்த ரசிகர்கள் எது எப்படியோ ஒரு வழியாக மன்சூர் அலிகான் – திரிஷா பஞ்சாயத்து முடிந்துவிட்டது என்று கூறி வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *