தமிழ் சினிமா உலகில் கிட்டத்தட்ட 48 வருடங்களுக்கு மேலாக சூப்பர் ஸ்டார் என்று அந்தஸ்தில் கொடி கட்டி பறந்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள். அப்படி இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கும் சூப்பர் ஸ்டார் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர் . இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த படம் வெளியாவதற்கு முன்பே மனநிம்மதிக்காக ,
இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்றார் ரஜினிகாந்த். அப்படி அந்த ஆன்மீகப் பயணத்தை முடித்து வரும்போது உத்திர பிரதேசம் வந்ததும் அந்த மாநிலத்தின் முதல்வரான யோகி ஆதித்யநாத்தை சந்தித்திருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . அப்படி அவரை சந்தித்தது மட்டுமல்லாமல் ,
அவருடைய காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார் ரஜினிகாந்த் . இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . அதோடு ரஜினியை விட அவர் 20 வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் அவர் நாத சைவ சம்பிரதாயத்தை சேர்ந்தவர் என்பதால் ரஜினி ஆசிர்வாதம் வாங்கினார்,
என்று தகவல் வெளியானது . இப்படி இருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பா ரஞ்சித்தின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது . அந்த வீடியோவில் பா ரஞ்சித் கூறியதாவது , ஏன் கால்ல விழுற , அறிவில்லையா உனக்கு .?
இன்னொருத்தன் காலில் விழுவது எவ்வளவு பெரிய அடிமைத்தனம் , அதையே ஏன் தொடர்ந்து செய்யற என்று கொந்தளித்திருந்தார் . தற்போது அந்த வீடியோவை நெட்டிசன்கள் ட்ரெண்ட் ஆகி வருகின்றனர் . இதோ அந்த வீடியோ பதிவு நீங்களும் பாருங்க…
Vera vazhi Therila tag panida vendiyathu thaan @rajinikanth pic.twitter.com/OSOgYuAupw
— CSK (@CSK_myspace) August 19, 2023