விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிகழ்ச்சி தான் பிக் பாஸ் நிகழ்ச்சி . இந்த நிகழ்ச்சி இதுவரை ஆறு சீசன்களை கடந்த நிலையில் தற்போது ஏழாவது சீசன் கடந்த வாரம் தான் தொடங்கப்பட்டது. இந்த சீசனில் கூல் சுரேஷ், ஐஸு ,விஜய் வருமா, ஜோவிகா விஜயகுமார் , பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை ,விஷ்ணு ,பூர்ணிமா ,
சரவண விக்ரம், வினுஷா, யுகேந்திரன் ,மாயகிருஷ்ணா ,விசித்ரா,மணிசந்திரா , ரவீனா என்று மொத்தம் பதினெட்டு போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் . அப்படி அந்த 18 போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டவர் தான் அனன்யா ராவ். சமூக வலைத்தளங்களின் மூலம்,
பிரபலமான அனன்யா ராவ் பிக் பாஸ் வீட்டில் கள்ளம் கபடம் இல்லாமல் விளையாடி வந்தார் . இதனாலையே கடைசியில் இவரை எலிமினேட் செய்துள்ளார்கள். குறிப்பாக இன்னும் சில நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்க நினைத்தாராம் அனன்யா ராவ் . ஆனால் அது நடக்காமல் போய்விட்டது .
அப்படி ஏழு நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததற்காக அனன்யா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வகையில் அனன்யா ராவுக்கு ஒரு நாளைக்கு 12 ஆயிரம் சம்பளமாக பேசப்பட்டு இருந்ததாம் . அப்படி பிக் பாஸ் வீட்டில் ஏழு நாட்கள்,
இருந்த அனன்யா ராவுக்கு மொத்தமாக 84,000 சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம் . இதைப் பார்த்த ரசிகர்கள் வெறும் ஏழு நாட்களுக்கு இவ்வளவு சம்பளமா என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர்…