அந்த காலகட்டத்தில் எப்படி ரஜினி, கமலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து வந்ததோ .? அதேபோல நடிகர் விஜயகாந்துக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வந்தது . கடந்த 1979 ஆம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமான விஜயகாந்த் சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் . இதன் பிறகு பல சூப்பர் ஹிட் படங்களில் ,
நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் விஜயகாந்த் அவர்கள் . மேலும் தமிழ் ரசிகர்கள் இவரை கேப்டன் என்று அன்போடு அழைத்து வருகின்றனர். இப்படி சினிமாவில் கொடி கட்டி பறந்து வந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் அரசியலிலும் களமிறங்கினார் . ஆனால் அவருடைய கெட்ட நேரமோ என்னமோ .?
அவருடைய உடல் நலக்குறைவால் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் இன்று தன்னுடைய 71 வது பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடியுள்ளார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் . இப்படி இருக்கும் நிலையில் சிங்கம் மாதிரி இருந்த மனிதர் இப்படி ஆனதற்கு காரணமே அந்த விஷயம் தான் என்று,
வெளிப்படையாக கூறியுள்ளார் பிரபல நடிகர் ஒருவர். அவர் வேறு யாருமில்லை நடிகர் மீசை ராஜேந்திரன் தான். ஆரம்பத்தில் இருந்தே விஜயகாந்துடன் இருந்து வரும் மீசை ராஜேந்திரன் கூறியதாவது, விஜயகாந்த் ஒரு கடுமையான உழைப்பாளி . அதுவும் ஒரு வருடத்திற்கு 14 படங்கள் நடிப்பு சாதனை படைத்திருக்கிறார் .
அப்படி அந்த காலகட்டத்தில் சரியான ஓய்வு இல்லாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காரணத்தால் தான் அவருடைய உடல்நிலை தற்போது இப்படி பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று கூறியிருந்தார் நடிகர் மீசை ராஜேந்திரன்…