தமிழ் சினிமா உலகில் கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் பசங்க. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் கிஷோர் டி எஸ். இந்த படத்தில் அன்புக்கரசு ஐஏஎஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதையும் வென்றார் கிஷோர்.
பின்னர் இந்த படத்தை தொடர்ந்து துரோகி, கோலிசோடா, நெடுஞ்சாலை, வஜ்ரம் ,சகா ,உறுதி கொள் , ஹவுஸ் ஓனர் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் கிஷோர் . இதைத்தொடர்ந்து தற்போது தெலுங்கு படம் ஒன்றில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார் ,
நடிகர் கிஷோர். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல சீரியல் நடிகையான பிரீத்தி குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகர் கிஷோர் . இப்படி இருக்கும் நிலையில் திருமணம் ஆனதும் மனைவியுடன் எடுத்த புகைப்படங்களை ,
தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கிஷோர் . இதை பார்த்த ரசிகர்கள் பசங்க படத்தில் வரும் அன்புக்கரசு ஐ ஏ எஸ்ஸா இது .? என்று ஆச்சிரியத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …