April 26, 2024

இவர் இல்லைனா இன்று விஜய் சேதுபதி இல்ல ..!! தூக்கிவிட்டு அழகு பார்த்த நடிகர் ..!! இப்போது வரை கூடவே வைத்திருக்கும் விஜய்சேதுபதி ..!!

தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான பாதையில் பயணித்து வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி . அப்படி ஆரம்பத்தில் ஹீரோவாக கலங்கி கொண்டு வந்த விஜய் சேதுபதி தற்போது வில்லன் கதாபாத்திரம் , குணசித்திர கதாபாத்திரம் என்று கிடைக்கும் கதாபாத்திரங்களில் எல்லாம் ஸ்கோர் செய்து வருகிறார் . அது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவை கலக்கி வந்த ரஜினி ,கமல் , விஜய் போன்ற நடிகர்களுக்கு ,

வில்லனாக நடித்தும்  அசத்தியிருந்தார் நடிகர் விஜய் சேதுபதி.  இதை அடுத்து தற்போது 50 ஆவது படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் விஜய் சேதுபதி.  இப்படி இருக்கும் நிலையில் விஜய் சேதுபதி இவ்வளவு உச்சத்தில் இருக்க காரணமே இந்த நடிகர் தானாம்.  அவர் வேறு யாருமில்லை,

நடிகர் அருள் தாஸ் தான் . ஷாஜகான் படத்தின் மூலம் அறிமுகமான அருள் தாஸ் தொடர்ந்து நான் மகான் அல்ல, தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை ,சூது கவ்வும், தங்க மீன்கள் ,பாபநாசம் போன்ற பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

குறிப்பாக இவர் விஜய் சேதுபதி நடித்த பாதி திரைப்படங்களில் நடித்திருப்பார் . அதற்கு காரணம் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக அறிமுகமான தென்மேற்கு பருவக்காற்று படத்தில் விஜய் சேதுபதியை பரிந்துரை செய்ததே நடிகர் அருள்தாஸ் தானாம் . அந்தப் பரிந்துரையின் பேரில்தான்,

ஹீரோவாக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.  இதனால் தன்னை தூக்கி விட்டு வரை மறக்கக்கூடாது என்று இன்றுவரை தன்னுடைய படங்களில் அவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறாராம் நடிகர் விஜய் சேதுபதி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *