மிக்ஜாம் புயலால் சென்னையே சூறையாடப் பட்டுள்ளது. இதனால் அன்றாட தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவித்துக் கொண்டு வருகின்றனர் சென்னை மக்கள். இப்படி இருக்கும் நிலையில் மழை குறைந்துவிட்டதால் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைமைக்கு திரும்பி வருகிறது சென்னை. இந்நிலையில் நேற்று வெள்ளத்தால் பல இடங்களில் வீட்டிற்குள்ளேயே தண்ணீர் புகுந்திருந்தது.
அப்படி நடிகர் விஷ்ணு விஷால் தங்கி இருந்த வீட்டிலும் தண்ணீர் புகுந்ததால் , வீட்டின் கூரை மீது ஏறி நின்று யாராவது உதவி செய்யுங்கள் என்று பதிவு போட்டிருந்தார் நடிகர் விஷ்ணு விஷால் . அப்படி அவர் பதிவு போட்ட 4 மணி நேரத்திலேயே மீட்புக் குழு விரைவாக வந்து,
விஷ்ணு விஷாலையும் அவருடைய குடும்பத்தையும் பத்திரமாக மீட்டனர் . அது மட்டுமல்லாமல் சென்னையில் தங்கியிருந்த பாலிவுட் நடிகரான அமீர்கானையும் பத்திரமாக மீட்டனர் மீட்பு குழுவினர் . இதன் பிறகு இந்த சம்பவத்தை அறிந்த அஜித் நேரில் சென்று விஷ்ணு விஷாலையும் ,
அமீர் கானையும் பார்த்தது மட்டுமில்லாமல் விஷ்ணு விஷாலின் வீட்டின் அருகில் இருந்த மக்கள் வெளியே செல்வதற்கு சார் ஏற்பாடு செய்து அஜித் உதவியதாகவும் பதிவு ஒன்றை போட்டு இருந்தார் நடிகர் விஷ்ணு விஷால். இதோ அந்த பதிவை நீங்களும் பாருங்க…