கமல்ஹாசன் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட மூத்த முன்னணி நடிகர் ஆவார் . விக்ரம் படத்திற்கு பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. அது மட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் பல வருடமாக கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் விஜய் டிவியின் காலில் விழுந்து தான் தொகுப்பாளர் வாய்ப்பை கமல் வாங்கினார் என்று பரபரப்பை,
ஏற்படுத்தியுள்ளார் பிக் பாஸ் பிரபலம் ஒருவர் . அவர் வேறு யாருமில்லை பாடகி சுசித்ரா தான் . எப்போதும் சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு வரும் சுசித்ரா கமல் குறித்து கூறியதாவது , அவர் விஜய் டிவியின் காலில் விழுந்து தான் தொகுப்பாளர் வாய்ப்பே வாங்கி இருக்கிறார்.
அதோடு அவர் எக்ஸ்பியரியான தாத்தா அவருக்கு எதுக்கு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி எல்லாம் . அதுவும் அவர் அந்த நிகழ்ச்சியில் போடும் உடையெல்லாம் மோசமான முன்னுதாரணம் தான் . இதனால் சீக்கிரம் சிம்புவை கூப்பிடுங்க என்று கூறியிருந்தார் . அது மட்டுமல்லாமல்,
பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களிடமும் பாரபட்சம் பார்க்கிறாராம் கமல்ஹாசன். அப்படி தனக்கு பிடித்த போட்டியாளர்களிடம் ஒரு மாதிரி பேசுவது , பிடிக்காத போட்டியாளர்களிடம் ஒரு மாதிரி பேசுவது என்று கமலும் தொடர்ந்து சர்ச்சையை கிளப்பி வருகிறார் .
அப்படி சமீபத்தில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு முக்கியம் என்று பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து அதிரடியாக வெளியேற்றினார் கமல்ஹாசன். இருந்தாலும் தற்போது சுசித்ரா கமல் குறித்து வெளிப்படையாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…