April 29, 2024

என்னுடைய கணவருக்கு விஐபி ஜெயில் கொடுங்க ..!! அவர் சாதாரண ஆள் கிடையாது ..!! மனு போட்ட மகாலட்சுமி ..!! இதெல்லாம் இவருக்கே ஓவரா தெரியல ..??

தமிழ் சினிமா உலகில் பிரபல தயாரிப்பாளராக இருந்து வந்தவர் ரவீந்தர் சந்திரசேகர்.  சுட்ட கதை என்ற படத்தின் மூலம்  தமிழ் சினிமாவிற்கு  தயாரிப்பாளராக அறிமுகமானார் ரவீந்தர். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து  நலனும் நந்தினியும் , நட்புனா என்னன்னு தெரியுமா , முருங்கக்காய் சிப்ஸ் போன்ற பல படங்களை தயாரித்து இருந்தார்.  இப்படி இருந்த நிலையில் கடந்த வருடம்,

பிரபல சீரியல் நடிகையான மகாலட்சுமி யை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் தயாரிப்பளார் ரவீந்தர் . அப்படி இவர்கள் திருமணம் செய்த போது பலரும் இவர்களை கேலி செய்தார்கள்.  குறிப்பாக பணத்திற்காக தான் மகாலட்சுமி இவரை திருமணம் செய்து கொண்டார்,

என்றெல்லாம் மோசமாக  கூறிவந்தனர் . ஆனால் அதையெல்லாம் சுத்தமாக  கண்டு கொள்ளாமல் இருவரும் நன்றாகத்தான் வாழ்ந்து வந்தனர். சமீபத்தில் தான் முதலாம் ஆண்டு திருமண நாளை இருவரும் கொண்டாடி இருந்தனர் .  இப்படியொரு நிலையில் சமீபத்தில் ,

16 கோடி மோசம் செய்த வழக்கில் மாட்டிய தயாரிப்பளார்  ரவீந்தர் தற்போது ஜெயிலில் இருந்து வருகிறார் . இந்த விஷயம் அப்போது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது . இந்நிலையில் தன்னுடைய கணவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்றும் , அவருக்கு விஐபிகளுக்கான ,

முதல் வகுப்பு சிறை வசதி வழங்கும் படியும் மனதாக்கல் செய்திருந்தார் சீரியல் நடிகை  மகாலட்சுமி . அந்த வழக்கை விசாரித்த நீதிபதி தற்போது அந்த மனுவை தள்ளுபடி செய்ய சொல்லி உத்தரவிட்டுள்ளாராம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *