தற்போது தமிழ் சினிமா உலகில் நடிகைகளுக்கு போட்டி என்றால் அது திரிஷாவுக்கும், நயன்தாராவுக்கும் தான். அந்த வகையில் இருவரும் ஒரே சமயத்தில் தான் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார்கள் . இடையில் திரிஷா கொஞ்சம் மார்க்கெட்டை இழந்தபோது நயன்தாரா அந்த இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார் . இதன் பிறகு லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்திலும் இருந்து வருகிறார் .
ஆனால் இப்போது அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. காரணம் நயன்தாராவுக்கு திருமணம் ஆகி விட்டதால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து வருகிறது . இதனால் திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது . அந்த வகையில் நடிகை திரிஷா தற்போது விஜய்யின் லியோ படம் ,
மோகன்லாலுடன் ஒரு படம், தி ரோடு, சதுரங்க வேட்டை 2 போன்ற பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் . இதனால் இனிமேல் இவரை தோற்கடிக்க முடியாது என்று நினைத்த நடிகை நயன்தாரா தற்போது ஸ்ரீதேவியின் யுத்தியை கையில் எடுத்துள்ளாராம்.
அது என்னவென்றால் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்து வந்த நடிகை ஸ்ரீதேவி ஒரு கட்டத்தில் ஹிந்தி சினிமாவிற்கு சென்றதும் அங்கையே செட்டிலாகி விட்டார் . இதனாலேயே இவருக்கு பெரிய அளவில் பெயரும் ,புகழும், பணமும் கிடைத்தது.
இந்நிலையில் தற்போது அவருடைய யுத்தியை கையில் எடுத்துள்ளாராம் நடிகை நயன்தாரா. அந்த வகையில் தற்போது ஹிந்தியில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்த முடித்துள்ள நயன்தாரா அடுத்தடுத்து பாலிவுட் படங்களில் மட்டுமே நடிப்பதற்கு முடிவெடுத்துள்ளாராம்…