நடிகர் விஜய் தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களில் ஒருவராவார் . இவர் விரைவில் அரசியலுக்கு வரப்போகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . அதற்கான ஏற்பாடுகளை இப்போதே செய்து வருகிறார் நடிகர் விஜய் . இன்னும் சொல்ல போனால் நடிகர் விஜயின் டார்கெட் மாணவர்கள் மட்டும் தானாம் . காரணம் இப்போது மாணவர்களாக உள்ளவர்கள் விஜய் அரசியலில் நிற்கும்போது,
கண்டிப்பாக இவருக்குத்தான் ஓட்டு போடுவார்கள் . அதற்காக மாணவர்களை குறி வைத்து ஒவ்வொரு செயல்பாடுகளையும் செய்து வருகிறார் நடிகர் விஜய். அந்த வகையில் சமீபத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை,
நேரில் சந்தித்து பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி இருந்தார் நடிகர் விஜய் . இதையடுத்து அடுத்ததாக தளபதி விஜய் நூலகத்தை திறக்க உள்ளாராம் . அந்த வகையில் இப்போதுள்ள இளைஞர்களின் பொது அறிவையும், புத்தக வாசிப்பு திறனையும் அதிகரிக்கும் நோக்கத்தில்,
எல்லா தொகுதிகளிலும் தளபதி விஜய் நூலகம் திறக்கப்பட உள்ளதாம். அந்த வகையில் இன்று தளபதி விஜயின் முதல் நூலகம் செங்கல் பட்டில் தொடங்க உள்ளதாம். இதைத்தொடர்ந்து ஒவ்வொரு தொகுதிகளிலும் நடிகர் விஜய்யின் நூலகம் திறக்கப்பட உள்ளதாக தகவல் ,
வெளியாகி உள்ளது . இதைப் பார்த்து ரசிகர்கள் விஜய் முழு நேர அரசியல்வாதியாகவே மாறிவிட்டார் போல என்று கூறி வருகின்றனர்…