நயன்தாரா தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகை என்ற அந்தஸ்தில் கொடிகட்டி பறந்து வருகிறார் . மேலும் தமிழ் சினிமாவை சேர்ந்த ரஜினி ,விஜய், அஜித், சூர்யா ,விக்ரம் ,சிம்பு ,தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார் நடிகை நயன்தாரா . இப்படி கொடிகட்டி பறந்து வந்த நயன்தாராவுக்கு அண்மைக்காலமாக வெளியான எந்த திரைப்படங்களும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை.
அப்படி இருந்தும் பல திரைப்படங்களை இப்போதும் கைவசம் வைத்திருக்கிறார் நடிகை நயன்தாரா . இந்நிலையில் கடந்த வாரம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் . இவருடைய இறப்பிற்கு பல தமிழ் பிரபலங்கள் வரவில்லை என்பது தான்,
சோகமான விஷயமே . மேலும் இறப்பிற்கு தான் வரவில்லை , நினைவிடத்திற்காவது பல பேர் வந்திருக்கலாம். ஆனால் அதற்கும் கூட இவர்களுக்கு நேரமில்லை போல. இப்படி இருக்கும் நிலையில் இறப்பிற்கும் வராமல் நினைவிடத்திற்கும் வராமல் இருந்து வந்த,
நயன்தாரா நேற்று நடந்த கலைஞர் 100 நிகழ்ச்சியில் மட்டும் கலந்து கொண்டிருக்கிறார். இதுதான் தற்போது ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது. இதை பார்த்த பலரும் கேப்டன் இறப்புக்கு போக நேரமில்லை, சமாதிக்கு போக நேரமில்லை ,ஆனா இதுக்கு மட்டும்,
நேரம் இருக்கா என்று நயன்தாராவை கிழி கிழின்னு கிழித்து வருகின்றனர். மேலும் நயன்தாரா மட்டுமல்லாமல் ஒரு சில நடிகைகளும் கேப்டனின் நினைவிடம் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது…