தமிழ் சினிமா உலகில் கடந்த 48 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தில் கொடி கட்டி பறந்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். அப்படி இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்த சூப்பர் ஸ்டாருக்கு சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . அந்த வகையில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோகன்லால்,
சிவராஜ்குமார் , ஜாக்கி சரப், விநாயகன் ,ரம்யா கிருஷ்ணன் ,வசந்த் ரவி ,யோகி பாபு போன்ற பலரின் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் இதுவரை 550 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது . மேலும் ஆரம்ப காலகட்டங்களில் இருந்தே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார்,
என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்து வந்தது. பின்னர் சில வருடங்களுக்கு முன்பு அரசியலுக்கு கண்டிப்பாக வருகிறேன் என்று கூறிய ரஜினி என்ன நினைத்தாரோ தெரியவில்லை, திடீரென அரசியலுக்கு வர மாட்டேன் என்று மீண்டும் அறிவித்துவிட்டார் .இப்படி இருக்கும் நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி ,
யாருக்கு ஆதரவு தரப் போகிறார் என்று ரஜினியின் அண்ணனான சத்ய நாராயண ராவ் வெளிப்படையாக கூறியுள்ளார் . அந்த வகையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினியின் அண்ணனிடம் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி யாருக்கு ஆதரவு கொடுப்பார் என்று கேட்டுள்ளனர் . அதற்கு பதிலளித்த ,
ரஜினியின் அண்ணன் கூறியதாவது, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி யாருக்கும் குரல் கொடுக்க மாட்டார் . அவர் அரசியலுக்கும் வரமாட்டார் . அதனால் ரசிகர்கள் தங்களுக்கு எந்த கட்சி பிடிக்கிறதோ அந்த கட்சிக்கே ஓட்டு போடலாம் என்று கூறியிருந்தார்…