பொதுவாகவே எல்லா பெண்களும் தனக்கு ஒரு நல்ல அன்பான ஒருவர் கணவராக வரவேண்டும் என்று ஆசைப்படுவார்கள் . அந்த வகையில் ஒரு நடிகை ஒருவர் எனக்கு அஜித் போல தான் கணவர் வேண்டும் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார். அவர் வேறு யாருமில்லை நடிகை திரிஷா தான் . மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய திரிஷா குறிப்பிட்ட காலகட்டத்திலேயே ,
முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் . குறிப்பாக தமிழ் சினிமாவை கலக்கி வந்த ரஜினி ,கமல் ,விஜய் ,அஜித், சூர்யா ,விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார் நடிகை திரிஷா. இப்படி டாப் நடிகையாக கொடிகட்டி பறந்து வந்த திரிஷா தற்போது ,
ஆறு திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் 40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள் ளாமல் இருந்து வரும் திரிஷா சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய வருங்கால கணவர் பற்றி பேசியிருந்தார் . அந்த வகையில் அவர் கூறிய தாவது ,
என்னுடைய திருமணத்தைப் பற்றி தான் அடிக்கடி கேள்வி எழுந்து கொண்டே இருக்கிறது. அப்படி நான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் என் மனதிற்கு பிடித்த ஒருவரை நான் சந்திக்க வேண்டும் . மேலும் நடிகர் அஜித்தை எனக்கு ரொம்ப பிடிக்கும் . அவர் ஒரு ஜென்டில்மேன்.
குறிப்பாக அவர் நல்ல கணவராகவும், நல்ல தந்தையாகவும் இருக்கிறார் . இதனால் அவரை போல ஒருவரை தான் கணவராக வர வேண்டும் என்று எல்லா பெண்களும் ஆசைப்படுவார்கள் என்று கூறியிருந்தார் நடிகை திரிஷா…