ரவீந்தர் சந்திரசேகர் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். தமிழில் வெளியான பல திரைப்படங்களை தயாரித்து இருந்த ரவீந்தர் கடந்த வருடம் சீரியல் நடிகையான மகாலட்சுமியை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் . மேலும் இவர்கள் இருவரும் திருமணம் ஆனதிலிருந்தே பல சர்ச்சைகளை சந்தித்து வருகின்றனர் . அது மட்டுமல்லாமல் அண்மையில் பணம் மோசடி காரணமாக,
ஜெயிலுக்கு சென்று திரும்பினார் ரவிந்தர் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மகாலட்சுமி குறித்து ரவீந்தர் கூறியதாவது , தினமும் 10 மணி ஆனால் போதும் அவர் நடித்த அன்பே வா சீரியலை பார்க்க சொல்லி மகாலட்சுமி டார்ச்சர் பண்ணுவதாகவும்,
அதுமட்டுமில்லாமல் அந்த சீரியலை தன்னை விளம்பரம் செய்ய சொல்கிறார் என்றும் இதனால் மகாலட்சுமியை நான் விவாகரத்தே செய்து இருப்பேன் என்று சிரித்தபடியே கூறியிருந்தார் ரவிந்தர்…