திவ்யா கணேஷ் ஓர் பிரபலமான தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகை ஆவார் . நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட நடிகை திவ்யா கணேஷ் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒளிப்பரப்பான கேளடி கண்மணி என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் இந்த சீரியலை தொடர்ந்து லட்சுமி வந்தாச்சு , செம்பருத்தி போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார் . இருந்தாலும் இவர் ரசிகர்களை பெரிய அளவில் பிரபலமானது ,
பாக்கியலட்சுமி சீரியல் மூலம் தான் . இந்த சீரியலில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் நடிகை திவ்யா கணேஷ் . இப்படி சின்னத்திரையில் கலக்கிக் கொண்டு வந்த திவ்யா கணேஷ் வெள்ளிதிரையில் வெளியான அட்டு என்ற படத்தின் மூலம்,
நடிகையாக அறிமுகமானார். இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் திவ்யா கணேஷ் அவ்வப்போது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருவார் . அந்த வகையில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,
புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் திவ்யா கணேஷ் . அந்த புகைப்படத்தில் அவர் அணிந்திருக்கும் பேண்ட் முழுக்க ஒரே பட்டாசுகளாக இருந்தது. இதைப் பார்த்த ரசிகர்கள் திவ்யா கணேஷ் பட்டாசு பாலுவாக மாறிவிட்டார் போல என்று கூறி வருகின்றனர்…