தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகர் விஜய்யை பிடிக்காதவர்கள் யாருமே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். அப்படி ஒரு நடிகை எனக்கு விஜய் போல கணவர் வேண்டும் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். அவர் வேறு யாருமில்லை நடிகை கீர்த்தி சுரேஷ் தான். கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ் .
பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ரஜினிமுருகன் ,தொடரி ,ரெமோ, பைரவா ,தானா சேர்ந்த கூட்டம் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து விட்டார் நடிகை கீர்த்தி சுரேஷ் . குறிப்பாக இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் தொடர்ந்து ,
நடித்துக் கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . ஆனால் அண்மைக்காலமாக இவருடைய நடிப்பில் வெளியான எந்த திரைப்படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அப்படி இருந்தும் கூட தற்போது நான்கு திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் . இந்நிலையில் 30 வயதாகியும் ,
இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் பல வருடங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டி ஒன்றில் என்னுடைய வருங்கால கணவர் விஜய் போன்று தான் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் . மேலும் இவர் இப்படி கூறியதற்கு ஒரு காரணமும் இருக்கு . அது என்னவென்றால் , கீர்த்தி சுரேஷும்,
விஜய் யும் இணைந்து பைரவா மற்றும் சர்கார் போன்ற படங்களில் ஒன்றாக நடித்திருந்தனர் . அப்போது நடிகர் விஜய்யுடன் பழகும் போது அவருடைய குணம் பிடித்துப் போனதால் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படி கூறியிருக்கிறார் என்று கூறப்படுகிறது…