தமிழ் சினிமா உலகில் கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெய் பீம் . இந்தப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் ,ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், குரு சோமசுந்தரம் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . நிஜ கதையை மையமாக வைத்து உருவான இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களை கண் கலங்க வைத்தது ,
என்று தான் சொல்ல வேண்டும் . அந்த அளவிற்கு உணர்வுபூர்வமாக இந்தப் படத்தை எடுத்திருந்தார் இயக்குனர் . அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை சூர்யாவே தயாரித்து இருந்தார் . இதனால் சூர்யாவுக்கு ஒரு நல்ல படத்தை தயாரித்தோம் என்ற பெருமையும் உள்ளது .
இப்படி இருக்கும் நிலையில் தமிழக முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் என்று கூறியிருக்கிறார் நடிகர் சூர்யா. இதற்குக் காரணம் என்னவென்றால் , ஜெய்பீம் திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டு நிறைவு செய்துள்ளது. அப்படி இருந்தும் இந்தப் படத்திற்கு கிடைக்கிற,
வாழ்த்து சூர்யாவை சிலிர்ப்பு ஊட்டுகிறதாம். இதற்காக அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து இருந்தார் சூர்யா . அதோடு ஜெய் பீம் படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடியினர் மக்களுக்கு கிடைத்திருக்கும் பல நன்மைகள் ஜெய் பீம் படத்தின் ,
நோக்கத்தை முழுமை அடைய செய்த தமிழ்நாட்டின் முதல்வருக்கும் அரசுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் என்று கூறியிருந்தார் நடிகர் சூர்யா. இதோ நடிகர் சூர்யா வெளியிட்ட பதிவு …
ஜெய்பீம் திரைப்படம் வெளியான இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, வருகிற வாழ்த்தும், வெளிப்படுகிற அன்பும் சிலிர்ப்பூட்டுகின்றன. மக்களின் மனதில் நிலைத்திருப்பதே ஒரு படைப்பிற்கான சிறந்த அங்கீகாரம். நல்முயற்சியை வரவேற்று கொண்டாடி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
திரைப்படம்… pic.twitter.com/kW25rvVgGM— Suriya Sivakumar (@Suriya_offl) November 2, 2023