May 2, 2024

தமிழக முதல்வருக்கு மனதார நன்றி சொல்லிய சூர்யா ..!! எதற்கு தெரியுமா ..?? தற்போது அவரே வெளியிட்ட பதிவு ..!! நெகிழ்ச்சியில் ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குனர் டிஜே ஞானவேல்  இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெய் பீம் . இந்தப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் ,ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், குரு சோமசுந்தரம் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . நிஜ கதையை மையமாக வைத்து உருவான இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களை கண்  கலங்க வைத்தது ,

என்று தான் சொல்ல வேண்டும் . அந்த அளவிற்கு உணர்வுபூர்வமாக இந்தப் படத்தை எடுத்திருந்தார் இயக்குனர் . அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை சூர்யாவே தயாரித்து இருந்தார் . இதனால் சூர்யாவுக்கு ஒரு நல்ல படத்தை தயாரித்தோம் என்ற பெருமையும் உள்ளது .

இப்படி இருக்கும் நிலையில் தமிழக முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் என்று கூறியிருக்கிறார் நடிகர் சூர்யா.  இதற்குக் காரணம் என்னவென்றால் , ஜெய்பீம் திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டு நிறைவு செய்துள்ளது.  அப்படி இருந்தும் இந்தப் படத்திற்கு கிடைக்கிற,

வாழ்த்து சூர்யாவை சிலிர்ப்பு ஊட்டுகிறதாம்.  இதற்காக அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து இருந்தார்  சூர்யா . அதோடு ஜெய் பீம் படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடியினர் மக்களுக்கு கிடைத்திருக்கும் பல நன்மைகள் ஜெய் பீம் படத்தின் ,

நோக்கத்தை முழுமை அடைய செய்த தமிழ்நாட்டின் முதல்வருக்கும் அரசுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் என்று கூறியிருந்தார் நடிகர் சூர்யா. இதோ நடிகர் சூர்யா வெளியிட்ட பதிவு …

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *