தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஷால் . கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான செல்லமே என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் விஷால் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் விஷால் . இப்படி ஹீரோவாக கலக்கி கொண்டு வந்த விஷால் ஒரு கட்டத்தில் அவருடைய படங்களை,
அவரே தயாரித்தும் இருந்தார் . ஆனால் ஒரு கட்டத்தில் இவர் நடித்த எந்த படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால் முடங்கிப் போன விஷாலுக்கு கடந்த வருடம் வெளியான மார்க் ஆண்டனி நல்ல வரவேற்பை பெற்று தந்தது . இதைத்தொடர்ந்து தற்போது இரண்டு படங்களை ,
கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் விஷால் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தான் நடிகர் விஜய் தன்னுடைய புதிய கட்சியின் பெயரை அறிவித்திருந்தார் . தற்போது இவரை தொடர்ந்து நடிகர் விஷாலும் அரசியலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . அந்த வகையில் விஷால் வெளியிட்ட,
அறிக்கையில் நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை . “நன்றி மறப்பது நன்றன்று” என்ற வள்ளுவனின் வாக்கும்படி என்னால் முடிந்த உதவிகளை நான் செய்து கொண்டே இருப்பேன். அது என்னுடைய கடமை தற்போது மக்கள் நல இயக்கத்தின்,
மூலம் நான் செய்துவரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன். வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களில் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று அரசியலுக்கு வர உள்ளதை மறைமுகமாக கூறியிருந்தார் நடிகர் விஷால்…