தற்போது கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது . மேலும் இன்னும் 14 நாட்களுக்கு கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு தீவிர சிகிச்சை தேவை என்று மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. இதனால் ரசிகர்கள் பதட்டம் அடைந்தனர் . இப்படி இருக்கும் நிலையில் கேப்டன் விஜயகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்து,
அவர் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார் என்று வதந்திகள் கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருந்தார் பிரேமலதா . இப்படி இருக்கும் நிலையில் விஜயகாந்த் மருத்துவமனையில் இருக்கும் போது கூட தமிழ் சினிமா பிரபலங்கள் யாரும் கண்டுகொள்ளாதது தான் ரசிகர்களுக்கு ,
மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தியுள்ளது . இன்னும் சொல்லப்போனால் விஜய்யை தூக்கி விட்டதே விஜயகாந்த் தான் . ஆனால் அந்த நன்றிக்காக கூட விஜய் விஜயகாந்தை பார்ப்பதற்கு வரவில்லை . இந்நிலையில் விஜயகாந்தால் மேலே வந்த நடிகர்களில் சூர்யாவும் ஒருவர் ஆவார்.
அப்படி இவர்கள் இருவரும் இணைந்து பெரியண்ணா என்ற படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர் . அது மட்டுமல்லாமல் சூர்யாவுக்காக பல விஷயங்களை செய்திருக்கிறார் விஜயகாந்த். அந்த நன்றியை மறக்காத சூர்யா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ,
அண்ணன் விஜயகாந்த் அவர்கள் ,நலம் பெற பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாக பங்கேற்கிறேன். கோடான கோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும் ,அவரை பூரண குணமாகி நலம் பெற வைக்கும் என்று பதிவிட்டு இருந்தார்…
அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன்.!
கோடானகோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்.! அவரை பூரண குணமாக்கி, நலம் பெற வைக்கும்.!!
— Suriya Sivakumar (@Suriya_offl) December 3, 2023