ஐஸ்வர்யா ராய் ஓர் தவிர்க்க முடியாத இந்திய திரைப்பட நடிகை ஆவார் . ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்து வந்த ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டத்தையும் வென்றார். இதன் பிறகு தான் இவருக்கு பல படவாய்ப்புகள் குவிந்தது . அந்த வகையில் கடந்த 1997 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கினார் நடிகை ஐஸ்வர்யா ராய்.
பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஜீன்ஸ், எந்திரன் ,ராவணன், சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் போன்ற படங்களிலும் நடித்து தமிழ் ரசிகர்களை மயக்கி வைத்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராய் . மேலும் இவர் தமிழ், தெலுங்கு ,பெங்காலி, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழி,
படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பிரபல ஹிந்தி நடிகரான அபிஷேக் பிரச்சனை திருமணம் செய்து கொண்டார் நடிகை ஐஸ்வர்யா ராய் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் இன்று தன்னுடைய,
ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ஐஸ்வர்யாராயின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதை புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உலக அழகின்னு சும்மாவா சொன்னாங்க என்று கூறிவருகின்றனர் …