நடிகர் தனுஷ் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . துள்ளுவதோ இளமை என்ற படத்தி மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய தனுஷ் இன்று தவிர்க்க முடியாத பிரபல நடிகர் என்ற அந்தஸ்த்தில் இருந்து வருகிறார். அது மட்டுமல்லாமல் இவருக்கு தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களிலும் வரவேற்பு இருக்கிறது .
அந்த அளவிற்கு மற்ற மொழி ரசிகர்களாலும் தனுஷ் கொண்டாடப்பட்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷ் உடன்,
இணைந்து பிரியங்கா மோகன், சந்திப் கிஷன் , ஜான் கொக்கன் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . அப்படி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல முன்னணி கன்னட நடிகரான சிவராஜ் குமார் நடித்துள்ளார். இந்நிலையில் தனுஷ் குறித்து,
வெளிப்படையாக பேசி உள்ளார் நடிகர் சிவராஜ்குமா. ர் அதில் அவர் கூறியதாவது, படப்பிடிப்பில் தனுஷ் செமையாக ஃபன் பண்ணுவார் , நைட்டானா போதும் அவரின் அலப்பறைய தாங்க முடியாது . எங்கேயாவது வாங்கன்னு கூட்டிட்டு போயிருவாரு.
அப்படித்தான் குற்றாலத்தில் படப்பிடிப்பு நடந்தப்ப நைட்டு ஒரு கடைக்கு போய் ஒரே அலப்பறை ஆயிடுச்சு என்று கூறியிருந்தார் நடிகர் சிவராஜ்குமார் . இதை பார்த்த ரசிகர்கள் நைட்டானாலே தனுஷை கையில் பிடிக்க முடியாது போல என்று கூறி வருகின்றனர்…