தமிழ் திரை உலகில் ரஜினி, கமலுக்கு பிறகு பிரபல டாப் நடிகர்களாக கொடி கட்டி பறந்து வருபவர்கள் விஜய் மற்றும் அஜித் . ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் இணைந்து ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர் . மேலும் ஆரம்பத்தில் இருந்து இவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது . அப்படி இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர்.
இப்படி இருக்கும் நிலையில் விஜய் அஜித் இனிமேல் அதை செய்ய மாட்டார்கள் என்று பரபரப்பை கிளப்பியுள்ளார் பிரபலம் ஒருவர் . அவர் வேறு யாருமில்லை நடிகர் சித்ரா லட்சுமணன் தான் . சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சித்ரா லட்சுமணன் , பல இயக்குனர்கள் அஜித்தையும் விஜயையும்,
ஒரே படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருகின்றனர் . ஆனால் இதுவரை அது நடந்த பாடு இல்லை . ஆனால் நடிகர் விஜய் அஜித்தின் படங்கள் மட்டும் நேருக்கு நேர் மோதி வருகிறது . அந்த வகையில் கடந்த பொங்கலுக்கு அஜித்தின் துணிவு படமும் விஜயின் வாரிசு படமும்,
மோதியது . இதை அடுத்து தளபதி 68 படமும் விடாமுயற்சி படமும் மோதுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியானது . ஆனால் அப்படி நடந்தால் அது தயாரிப்பாளர்களின் தற்கொலைக்கு சமம் என்று கூறி இருக்கிறார் சித்ரா லட்சுமணன். இதற்கு காரணம் என்னவென்றால்,
இரண்டு திரைப்படங்களுமே மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வருகிறது . அப்படி இருக்கும் போது இரண்டு திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியானால் வசூலில் பெரிய அடி வாங்கும் . இதனால் இனிமேல் விஜயின் படமும் அஜித்தின் படமும் மோதாது என்று கூறியிருந்தார்…