நெல்சன் திலீப்குமார் ஒரு தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார் . ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த இயக்குனர் நெல்சன் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை தொடங்கினார் . ஆனால் அந்த திரைப்படம் பாதியிலேயே நின்று விட்டது . இதன் பிறகு நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் .
இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து டாக்டர் , பீஸ்ட் என்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்தார் இயக்குனர் நெல்சன். இதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர்,
என்ற படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் நெல்சன். ஆனால் பீஸ்ட் திரைப்படம் மோசமான விமர்சனத்தை பெற்ற போது நெல்சன் ரஜினி படத்தை இயக்கக் கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியது. அப்படி இருந்தும் சூப்பர் ஸ்டார் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தார் . அப்படி சூப்பர் ஸ்டார் ,
தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றி விட்டார் இயக்குனர் நெல்சன் . அந்த வகையில் இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. மேலும் ரஜினிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய ஜெயிலர் படத்திற்காக நெல்சன் வாங்கிய சம்பளம் ,
குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த படத்தை இயக்குவதற்காக நெல்சன் 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது . அதோடு இந்த திரைப்படம் வெற்றி பெற்றதால் அடுத்த படத்திற்கு இவருடைய சம்பளம் இன்னும் அதிகமாகும் என்றும் கூறப்படுகிறது…