April 25, 2024

500 கோடி வரதட்சணை கொடுத்தது உண்மையா ..?? பொய்யா ..?? பிரபு என்ன சொல்லுறாரு பாருங்க ..!! இப்பவாது நம்பறீங்களா ..??

தமிழ் சினிமா உலகில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக கலந்து கொண்டு வந்தவர் தான் இளைய திலகம் பிரபு அவர்கள்.  ஆரம்பத்தில் ஹீரோவாக கலக்கிக்கொண்டு வந்த பிரபு ஒரு கட்டத்தில் வயதான பிறகு தன்னுடைய வயதுக்கேற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் . மேலும் திருமணமான இவருக்கு விக்ரம் பிரபு என்ற மகனும்,  ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர் .

இதில் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு பிரபுவின் தங்கை மகனுடன் திருமணம் நடைபெற்றது . ஆனால் திருமணமான சில வருடங்களிலேயே இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் பிரிந்து விட்டனர் . இதனிடையே பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரான,

ஆதிக் ரவிச்சந்திரனுக்கும்,  ஐஸ்வர்யாவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியிருக்கிறது . பின்னர் வீட்டில் பேசி பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த வாரம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் . இவர்களுடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்றது .

இப்படி இருக்கும் நிலையில் தற்போது பேசும் பொருளாக மாறி இருப்பது மருமகன் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பிரபு 500 கோடி வரதட்சணை கொடுத்ததாக சொல்லிய தகவல் தான் . இந்நிலையில் இந்த தகவலை அறிந்த பிரபு கூறியதாவது,  ஏற்கனவே எங்களுடைய குடும்பத்தில் ,

சொத்து பிரச்சனை பெரிய அளவில் போய்க்கொண்டிருக்கிறது . இதில் இது வேறயா.? மேலும் நான் 500 கோடியை பத்திரப்பதிவு செய்து கொடுத்தது போல எல்லோரும் பேசுகிறார்கள்,  அப்படி எதுவும் நான் கொடுக்கவில்லை என்று வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருந்தார் பிரபு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *