கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இறந்து ஒரு வாரம் ஆகிறது . ஆனால் இப்போதும் கூட அவர் இறந்ததை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் சினிமா மீது இருந்த ஆர்வத்தில் சென்னைக்கு வந்த விஜயகாந்த் இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கினார். இதன் பிறகு இவர் நடித்த ஒவ்வொரு திரைப்படங்களும் சூப்பர் ஹிட் அடித்தது.
இப்படி தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் விஜயகாந்த் . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே கடந்த 1990 ஆம் ஆண்டு பிரேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணமான இவர்களுக்கு விஜய் பிரபாகர், சண்முக பாண்டியன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகனான விஜய் பிரபாகர் தயாரிப்பாளராக இருந்து வருகிறார் . இளைய மகனான சண்முக பாண்டியன் தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து வருகிறார் .
இப்படி இருக்கும் நிலையில் சிறுவயதிலிருந்தே அப்பா என்றால் உயிராக இருந்து வந்த இவர்கள் இருவரும் கேப்டனின் இறப்பின் போது கண்ணீர் விட்டு கதறினார்கள் . அவர்களுடைய கதறலை பார்த்து பல பேருக்கு கண்ணீரே வந்தது என்று தான் சொல்ல வேண்டும் .
இப்படி இருக்கும் நிலையில் கேப்டன் விஜயகாந்தும் , அவருடைய மகன்களும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…