இன்று தமிழ் சினிமாவை கலக்கி வரும் உச்ச நடிகராக கொடிகட்டி பறந்து வருகிறார் நடிக விஜய் . அதுமட்டுமில்லாமல் விஜய்யின் ஒவ்வொரு படங்களும் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பி வருகிறது . இப்படி புகழின் உச்சிக்கே சென்ற விஜய்யின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அவருடைய தந்தையான எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் தான் . அப்படி தன்னுடைய மகனை ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்து,
அழகு பார்த்தார் எஸ் ஏ சந்திரசேகர் . கிட்டத்தட்ட பல வருடங்களாக அப்பாவின் பேச்சை தட்டாமல் கேட்டு வந்த விஜய் சமீபகாலமாக அவருடைய அப்பாவிடம் பேசுவதில்லை என்று தகவல் வெளியானது. என்னதான் பேசவில்லை என்றாலும் அப்பாவின் ஆபரேஷனுக்கும் செல்லாமல்,
இருந்திருக்கிறார் விஜய். அந்த வகையில் 78 வயதிலும் சுறுசுறுப்பாக இருந்த எஸ் ஏ சந்திரசேகருக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஏதோ போல இருந்ததாம். உடனே மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தாராம் . இதன்பிறகு இன்னொரு முறை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்,
என்று மருத்துவர்கள் கூறினார்களாம் . அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அந்த அறுவை சிகிச்சையை செய்து கொண்டிருக்கிறார் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் . ஆனால் அப்பாவுக்கு ஆபரேஷன் நடக்கும் போது விஜய் கூட இல்லாமல் தன்னுடைய அடுத்த,
படத்திற்காக அமெரிக்கா சென்று இருக்கிறார். மேலும் தந்தைக்கு ஆபரேஷன் நடக்கப்போவது தெரிந்தும் கூட விஜய் இப்படி செய்தது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது…