தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது டாப் நடிகர்களாக கலக்கி கொண்டு வருபவர்கள் ரஜினி ,கமல், விஜய் , அஜித் தான் . இவர்களுக்கு பிறகு தான் மற்ற நடிகர்கள் எல்லாம் . இதனால் இவர்கள் சரியாக இருந்தால் தான் மற்ற நடிகர்களும் இவர்களை பார்த்து பின் தொடர்வார்கள் . ஆனால் இதில் கமல் அஜித்துக்கு இருக்கும் அக்கறை கூட ரஜினி, விஜய்க்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும் .
அந்த வகையில் ரஜினியும், விஜய்யும் தொடர்ந்து ஆக்சனுக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களங்களையே தேர்வு செய்து நடித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் இவர்களுடைய படத்தில் அதிகமாக மது அருந்தும் காட்சி மற்றும் சிகரெட் பிடிக்கும் காட்சி இடம்பெறுகிறது .
இது ரசிகர்களுக்கு ஒரு மோசமான முன்னுதாரணமாக இருந்து வருகிறது. ஆனால் கமல் , அஜித் அப்படி இல்லை . சமீப காலமாக ரசிகர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் கதைக்களங்களையே தேர்வு செய்து நடித்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2,
மற்றும் விவசாயத்தைப் பற்றி பேசப்போகும் புதிய படம் என்று நடித்துக் கொண்டு வருகிறார் . அதோடு அஜித்தின் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை ,வலிமை , துணிவு போன்ற படங்களும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலே இருந்தது.
இவர்களைப் போல ரஜினியும் , விஜய்யும் நல்ல கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வந்தால் அவர்களுக்கும் நல்ல பெயர் கிடைக்கும் ரசிகர்களுக்கும் ஒரு நல்ல விழிப்புணர்வு கிடைக்கும் என்று கூறப்படுகிறது…