ஜீவா ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரியின் மகனான ஜீவா ஆசை ஆசையாய் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தித்திக்குதே ,ராம் ,கற்றது தமிழ், ராமேஸ்வரம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது சிவா மனசுல சக்தி திரைப்படம் தான் .
இந்த திரைப்படம் இவரைப் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாக்கியது . இந்த படத்தை தொடர்ந்து சிங்கம் புலி, ரௌத்திரம், நண்பன், நீதானே என் பொன்வசந்தம், என்றென்றும் புன்னகை போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் ஜீவா . ஆனால் அண்மைக்காலமாக இவர் நடிக்கும்,
எந்த திரைப்படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அப்படி கடந்த சில வருடங்களாக இவருடைய நடிப்பில் வெளியான காபி வித் காதல், வரலாறு முக்கியம் ,கஸ்டடி போன்ற படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை . இதனால் தற்போது புதிய யுத்தியை கையில்,
எடுத்துள்ளாராம் ஜீவா . அது என்னவென்றால் இனி நடித்தால் போலீஸ் கதாபாத்திரத்தில் தான் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டாராம் ஜீவா . அதனால் போலீஸ் சம்பந்தப்பட்ட கதைகளை மட்டுமே தன்னிடம் கதை கூற வரும் இயக்குனர்களிடம் கேட்டு வருகிறாராம் ஜீவா .
மேலும் இதுவரை போலீஸ் கதாபாத்திரத்தில் ஜீவாவை யாரும் பார்த்ததில்லை . ஆனால் அண்மைக்கலமாக வெளியாகும் போலீஸ் திரைப்படங்கள் மண்ணை கவ்வி வருகிறது . இந்த நேரத்தில் இவருக்கு இது வெற்றி கொடுக்குமா? என்ற கேள்வியும் பலருக்கும் எழுந்துள்ளது…