May 7, 2024

கலா மாஸ்டருக்கு என்ன ஆச்சு ..?? கண்ணீர் அஞ்சலி போஸ்டரால் ஏற்பட்ட பரபரப்பு ..!! வெளிவந்த அதிர்ச்சி தகவல் ..!!

கலா மாஸ்டர் ஓர் தவிர்க்க முடியாத இந்தியத் திரைப்பட நடன கலைஞர் ஆவார் . கமல் நடிப்பில் வெளியான புன்னகை மன்னன் என்ற படத்தின் மூலம் நடன கலைஞராக அறிமுகமான கலா மாஸ்டர் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தவிர்க்க முடியாத நடந்த கலைஞராக மாறினார் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ,ஹிந்தி, கன்னடம், ஒரியா ,பெங்காலி ,ஆங்கிலம் என்று 4000 படங்களுக்கு மேல் ,

நடனம் அமைத்துக்கொடுத்திருக்கிறார் கலா மாஸ்டர்.  இப்படி இருக்கும் நிலையில் கலா மாஸ்டருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளனர் யாழ்ப்பாண மக்கள் . அந்த வகையில் சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் பாடகர் ஹரிஹரன் அவர்களின்,

இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் கலா மாஸ்டர் தானாம் . இப்படி இருந்த நிலையில் இந்த விழாவிற்கு என்ட்ரி இலவசம் என்றதும் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியதாம் . அப்போது விஐபிக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் ,

ரசிகர்கள் செல்ல முயன்று இருக்கிறார்கள்.  அப்போது அவர்களை கட்டுப்படுத்தும் போது ரசிகர்களுக்கும்,  காவலர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.  இதனால் பல பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  இப்படி இருக்கும் நிலையில் ,

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கலா மாஸ்டரை கண்டித்து யாழ்ப்பாண மக்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரே ஒட்டியுள்ளனர்.  இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *