பொதுவாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரொம்ப இளகிய மனம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அப்படி தன்னுடைய இரண்டு மகள்களையும் நல்ல இடத்தில் தான் கட்டிக் கொடுத்து இருந்தார் சூப்பர் ஸ்டார் . ஆனால் மூத்த மகளான ஐஸ்வர்யா தனுசை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். அதோடு ரஜினியின் இரண்டாவது மகளான சௌந்தர்யாவும் விவாகரத்து செய்து பின்னர் வேறு ஒருவரை ,
திருமணம் செய்து கொண்டார். இப்படி ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய மகள்களால் பல பிரச்சனைகளை அனுபவித்து இருக்கிறார் ரஜினிகாந்த் . ஆனால் 72 வயதிலும் தன்னுடைய மகளுக்காக தியாகம் செய்திருக்கிறார் ரஜினி . அந்த வகையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார்,
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது . அப்படி இருந்தும் தன்னுடைய 170 ஆவது படத்திற்கு வெறும் 90 கோடி சம்பளம் போதும் என்று கூறிவிட்டாராம் ரஜினிகாந்த். அந்த வகையில் ஜெய் பீம் பட இயக்குனரான,
டி ஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இந்தப் படத்திற்காக ரஜினி கம்மியாக சம்பளம் கேட்டதற்கு முக்கிய காரணமே அவருடைய மகள் ஐஸ்வர்யா தானாம். அந்த வகையில் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில்,
வெளியான லால் சலாம் படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரித்து இருந்தது . இதனால் மீண்டும் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளதால் தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்டாராம் ரஜினிகாந்த்…