மூத்த நடிகரான சிவகுமாரின் தவப் புதல்வன்கள் தான் சூர்யா மற்றும் கார்த்தி. இதில் சூர்யா நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தவிர்க்க முடியாத நடிகர் என்ற லிஸ்ட்டில் இணைந்தார் சூர்யா. இவரைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி வெளிநாட்டில் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை முடித்துவிட்டு இயக்குனர் மணிரத்னத்திடம்,
உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். இதன் பிறகு வெளியான பருத்திவீரன் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் கார்த்தி . இதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து இவரும் இன்று ஒரு தவிர்க்க முடியாத நடிகர் என்ற அந்த ஸ்டில் கலக்கி கொண்டு வருகிறார்.
மேலும் பொதுவாகவே அண்ணன் தம்பி என்றால் எதிர்மறையான குணத்தில் தான் இருப்பார்கள். ஆனால் சூர்யா மற்றும் கார்த்தி அப்படி கிடையாது. ஊரே கண்ணுபடும் அளவிற்கு ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர் சூர்யா மற்றும் கார்த்தி . குறிப்பாக தம்பியை ,
சூர்யா விட்டுக்கொடுக்காமல் பேசுவதும் , அண்ணனை கார்த்தி விட்டுக் கொடுக்காமல் பேசுவதும் இவர்களுடைய ஒற்றுமையை குறிக்கிறது. இந்நிலையில் சிறுவயதில் இருந்து இப்போது வரை இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது…