தமிழ் சினிமா உலகில் ஓர் தவிர்க்க முடியாத நடிகர் என்ற அந்தஸ்தில் இருந்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன் . எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் இன்று ஒரு முக்கிய நடிகராக கொடிகட்டி பறந்து வருகிறார் சிவகார்த்திகேயன் . இதற்கு முக்கிய காரணம் அவருடைய தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் தான் . குறிப்பாக இவர் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் ஆவார் .
அப்படி இருக்கும்போது டி இமான் கொடுத்த ஒரு பேட்டியால் சிவகார்த்திகேயனின் நல்ல பெயர் அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார் என்றும் , இதனால் இந்த ஜென்மத்தில் அவருடன் பணியாற்ற,
மாட்டேன் என்றும் கூறியிருந்தார் டி இமான். இவர் இப்படி கூறியதற்கு காரணம் டி இமானின் மனைவியும் , சிவகார்த்திகேயனும் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது . ஆனால் இது முற்றிலும் பொய்யான தகவல் என்று இமானின் மனைவி கூறியிருந்தார் . இருந்தாலும் சிவகார்த்திகேயனின் ,
பெயரைக் கெடுப்பதற்காக தொடர்ந்து இதுபோன்ற தவறான தகவல்களை பதிவிட்டு வருகின்றனர் . இதற்கு உதாரணமாக ஏழு வருடங்களுக்கு முன்பு தன்னுடைய மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார் டி இமான் .அந்த புகைப்படத்தை பார்த்த சிவகார்த்திகேயன்,
“வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி” என்று கூறியிருந்தார் . இப்படி கூறியவரா அது மாதிரி செய்யப் போகிறார், தேவையில்லாமல் சிவகார்த்திகேயன் மீது பழி சுமத்தாதீர்கள் என்று அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர் . இதோ அந்த பழைய பதிவை நீங்களும் பாருங்க…