கடந்த வாரம் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர் . சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இந்த திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது . குறிப்பாக இந்த திரைப்படம் வெளியானதிலிருந்தே வசூல் வேட்டை ஆடி வருகிறது . அப்படி இந்த திரைப்படம் இதுவரை 350 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ்,
தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது . இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் சூப்பர் ஹிட் ஆனதால் இயக்குனர் நெல்சனுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறதாம் . அந்த வகையில் ஏழு சொகுசு கார்களை காட்டியுள்ளாராம் .அதில் ஏதாவது ஒரு காரை இயக்குனர் நெல்சன் செலக்ட் செய்தால்,
உடனே அவருடைய வீட்டில் நிறுத்தி விடுவாராம் கலாநிதி மாறன் . அப்படி அந்த சொகுசு காரின் மதிப்பு கோடி கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் இனிமேல் இயக்குனர் நெல்சனை கையிலேயே பிடிக்க முடியாது என்று கூறி வருகின்றனர்…